Wednesday, August 19, 2015

இளங்கோவடிகள் - ஓர் பறவை ஆர்வலர்

பறவைகளைப் பார்த்தலும், பார்த்தப் பறவைகளைப் பட்டியலிட்டு ஆவணப்படுத்தலும் இன்று சிறந்த பொழுதுபோக்காக வளர்ந்துவருகிறது. ஆனால் இளங்கோவடிகள் கிட்டத்தட்ட 1700 ஆண்டுகளுக்கு முன்பே பறவைகளைப் பார்த்துப் பட்டியலிட்டிருக்கிறார்.
கோவலன், கண்ணகி, கவுந்தியடிகள் மூவரும் புகாரிலிருந்து மதுரை செல்ல, காவிரிக் கரையோரமாக நடந்து வருகின்றனர். அப்போது அங்கே, வளமிக்க மருத நிலத்தில் குரலெழுப்பியப் பறவைகளை சிலப்பதிகாரத்தின் நாடுகாண் காதையில் பட்டியலிடுகிறார்.
"கழனிச் செந்நெல் கரும்புசூழ் மருங்கில்
பழனத் தாமரைப் பைம்பூங் கானத்துக்
கம்புட் கோழியும் கனைகுரல் நாரையும்
செங்கால் அன்னமும் பைங்கால் கொக்கும்
கானக் கோழியும் நீர்நிறக் காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புறாவும்"
-> கம்புள் கோழி - White-breasted Waterhen
-> நாரை - Asian Open-bill / White Stork / Painted Stork
-> செங்கால் அன்னம் - புள்ளி மூக்கு வாத்து (Indian Sopt-billed Duck)
-> பைங்கால் கொக்கு - மடையான் (Indian Pond Heron)
-> கானக்கோழி - கானாங்கோழி (Watercock)
-> நீர்நிறக் காக்கை - நீர்க் காகங்கள் (Little & Indian Cormorants)
-> உள்ளு - உள்ளான் வகைப் பறவைகள் (All inland species of sandpipers / plovers / snipes)
-> ஊரல் - முக்குளிப்பான் (Little Grebe)
-> புள்ளு - சிகப்பு மூக்கு ஆள்காட்டிக் குருவி (Red Wattled Lapwing)
-> புறா - மணிப்புறா (Spotted Dove)?
ஆகா! இளங்கோவடிகளின் பறவைப் பட்டியலை ebirdல் checklist ஆகப் பதிவிடலாமே!! Birdwatchers அனைவருக்கும் முன்னோடி இளங்கோவடிகள்!!!
நன்றி: "தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவைகள்" by முனைவர் க.ரத்னம்

No comments:

Post a Comment